ஆந்திரா மாநிலத்தில் பேருந்து நிலைய நடைமேடை மீது பேருந்து ஏறிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு!
ஆந்திரா மாநிலம் விஜயவாடா பண்டிட் நேரு பேருந்து நிலையத்தில் விஜயவாடாவிலிருந்து குண்டூர் நோக்கிச் செல்லும் பேருந்து பயணிகளுடன் கிளம்பத் தொடங்கியது.
பேருந்தை இயக்க தொடங்கியபோது திடீரென பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விபத்தில் அரசு பேருந்து நடத்துனர் வீரய்யா, பேருந்துக்காகக் காத்திருந்த பெண் குமாரி என்பவரும், 6 வயது சிறுவன் அயான்ஸ் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
போக்குவரத்து அதிகாரிகள் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தியதில் ஓட்டுநர் நடைமேடையில் இருந்து புறப்பட ரிவர்ஸ் எடுப்பதற்கு பதில் ஆக்ஸிலரேட்டரை அழுத்தி விட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தகவல்.
இதுகுறித்து ஓட்டுநரை போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
காயமடைந்தவர்களை விஜயவாடா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.